பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு : ஒருவர் காயம்
ஆம்பூரில் பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.


ஆம்பூரில் பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.
ஆம்பூர் அரசமரத்தெருவில் கிஷன்லால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடப் பணி நடந்து வந்த வளாகத்திற்குள் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அதனருகில் வேலை செய்து வந்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன் (45) படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அதே இடத்தில் வேலை செய்து வந்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த மணி (50) என்பவர் காயமடைந்தார். ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...