விசாரணையில், 18 பேர் முகாமில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதும், மீதமுள்ள 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அரசின் அனுமதியின்றி கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்வதற்காக ஏஜண்டுகளிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.இந்த வழக்கில் கடலூர் துறைமுகம் போலீஸார் ஏற்கனவே 7 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்வழக்கில் போலீஸார் தேடப்பட்டு வந்த சென்னை புழல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவியை (40) வெள்ளிக்கிழமை இரவு கடலூர் துறைமுகம் போலீஸார் கைது செய்தனர்.