எனவே இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான இடங்களில் விருதுநகர் வட்டார பகுதியில்-40 சிலைகளும், சிவகாசி-41, அருப்புக்கோட்டை-25, ராஜபாளையம்-36, ஸ்ரீவில்லிபுத்தூர்-45, சாத்தூர்-28, திருச்சுழி-2 என மொத்தம் 217 விநாயகர் சிலைகள் ஏற்கனவே காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதம் ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதில், ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டுள்ள முக்கிய இடங்களிலும் 2 போலீஸார் வீதம் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க அந்தந்தப் பகுதி காவல் நிலைய விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு-ஆய்வாளர் ஆகியோர் அடிக்கடி வாகன ரோந்து வந்து சரிபார்க்க வேண்டும்.