இங்கு கடைகள் பெற விரும்புகிற குழுக்கள் விருதுநகரிலிருந்து 20 கி.மீ முதல் 25 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும். ஊராட்சிகள் அளவில் கூட்டமைப்பாகவும், பதிவுச் சட்டப்படி பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அதோடு, இக்கூட்டமைப்பில் குறைந்தது 20 பேர் தொழில் வாய்ப்பு அல்லது உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், இக்குழுக்கள் மீது எந்தவிதமான புகார் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கக் கூடாது. சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் பெற்று, அதைச் சுழல் நிதியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடன் விற்பனையில் ஆர்வமுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் தீர்மான நகல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகியவைகளின் நகல்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்குமாறு மகளிர் சுய உதவிக் குழுவினரை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.