விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வளையங்குளத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார்(30). இவர் ராஜபாளையத்தில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகிற ஏஜென்சி நடத்தி வரும் முகவர்களான ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த முருகன்(35) மற்றும் ஜெயபிரகாஷ்(48) ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது, ரூ.2 லட்சம் கொடுத்தால் குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பி ரூ.2 லட்சத்தை கடந்த 24.11.2012 அன்றைய நாளில் முகவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், மூன்று மாத்திற்குள் அனுப்பி வைப்பதாக கூறி நாள்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட பணத்தை உடனே கொடுக்கும் படி கூறியுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்து மிரட்டியுள்ளனர்.