தமிழக அரசு பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளின் படி மாவட்ட கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின்படி துணை ஆட்சியர் சங்கர்லால் குமாவாத் தலைவராகவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செயலராகவும், முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த கண்காணிப்புக் குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்துப் பள்ளி வாகனங்களையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.