தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டில் பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தபட்டோர், பழங்குடி பிரிவினர் ஆகியோருக்கு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட நாளில் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டியும் நடைபெற இருக்கிறது.இதில், தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, ஜிம்னாடிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கோ-கோ, டென்னிஸ், மேஜைபந்து, நீச்சல், கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தி்ல் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் முதல் பரிசாக ரூ.400ம், இரண்டாம் பரிசாக ரூ.250ம் வழங்கப்படவும் இருக்கிறது. எனவே இப்போட்டியில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விளையாட்டு மைதானத்திற்கு வீராங்கனைகள் வந்து விட வேண்டும்.