அந்த வகையில் தற்போது பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஊர்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், உயிர் காக்கும் மருந்துகள், டிரான்போர்ட் இன்குபேட்டர், வென்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ஊர்தியில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த ஊர்தியை அவசர நேரத்தில் 108 எண்ணுக்கு தொலைபேசி அல்லது கைபேசி மூலமாகவோ அழைத்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாமியப்பன், சுகாதாரத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) மருத்துவர் சம்பத், மாவட்ட செயல் அலுவலர்(ஆம்புலன்ஸ் சேவை) மணிகண்டசரவணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.