தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிகழாண்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் 4 பேருக்கும் ரூ.80 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், 30 பேருக்கு களையெடுக்கும் கருவி ரூ.50 ஆயிரம் மானியத்திலும், 15 பேருக்கு விசைத்தெளிப்பான்களும், 6 பேருக்கு நடவு செய்யும் இயந்திரமும் ரூ.1.25 லட்சம் மானியத்திலும், சுழல்கழப்பை, பவர் டிரில்லர், டிராக்டர், தோட்டக்கலை பண்ணை கழிவுகளை தூளாக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் கருவி, மரக்கிளை வெட்டும் கருவி உள்ளிட்டவைகள் பலருக்கு மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக பொதுப்பிரிவினருக்காக ரூ.84.25 லட்சமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.48.70 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.