எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜாதிச்சான்றிதழ் வழங்க இருளர் இன மக்கள் கோரிக்கை

கடலூர் ஒன்றியம் கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருளர்கள் 20-பேர்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலர் ராமு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.மனோகரனிடம் திங்கள்கிழமை

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:23 pm

பெ. விஜயபாஸ்கர்

ஜாதிச்சான்றிதழ் வழங்க இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் ஒன்றியம் கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருளர்கள் 20-பேர்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலர் ராமு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.மனோகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்,

கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த 26 குடும்பங்கள் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மிகவும் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, மனைப்பட்டா, சுகாதாரம் போன்ற எவ்விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அனைவருக்கும் ஜாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.