இதுவரையில் நிலம் இருப்பதை காட்டாமலும், கிரையம் செய்து தராமலும் தாமதம் செய்து வந்தனராம். இந்நிலையில், இறுதிக் கட்டமாக கொடுத்த பணத்தை மட்டும் திருப்பித் தருமாறு கடந்த வாரம் கேட்டுள்ளார். இதற்கு 3 பேரும் தரம் மறுத்ததோடு, தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதையடுத்து, பணமோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.