/

மதுரையில் ரூ.15 லட்சம் வழிப்பறி

மதுரை பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. அரிசி, பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், நாகர்கோவிலில் வியாபாரம் செய்த பணத்தை வசூல் செய்துவிட்டு மதுரை திரும்பினார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:19 pm

ஜெயப்பாண்டி

மதுரை பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. அரிசி, பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், நாகர்கோவிலில் வியாபாரம் செய்த பணத்தை வசூல் செய்துவிட்டு மதுரை திரும்பினார். இந்நிலையில், அவர் மதுரை காமராஜர் காலனி சௌராஷ்டிரா பள்ளியின் அருகே வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் வந்து, அவரது இரு சக்கர வாகனத்தை வழிமறித்தது. அவரை மிரட்டி, ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது.

இச்சம்பவம் குறித்து மதுரை தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.