இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தொழிற் கல்வி படிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு 2013-14-ம் ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், பி.பார்ம், பி.எஸ்.சி., நர்ஸிங், விவசாயம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எட்., ஆகிய படிப்புகளுக்கு மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000, மாணவிகளுக்கு ரூ.2,250 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.