மதுரையில் அடுத்தடுத்து கொலைகள்: போலீஸார் விசாரணை
மதுரை செல்லூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). கொத்தனார் பணி செய்யும் இவரை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று இரவு கத்தியால் குத்தினர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.









