இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழரசியின் தம்பி குறளமுதன் (29), விஷம் குடித்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர், திருநெல்வேலி பாரதியார் தெருவில் மனைவி கஸ்தூரி மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.இவரை கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர் ஒருவர் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிரட்டி வந்தாராம். மேலும், புதன்கிழமை இரவு கொக்கிரகுளம் அருகே குறளமுதனிடம் பேசிய அந்த ஆதரவாளர், குறளமுதனின் மனைவி தொடர்பாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.