விருதுநகர் மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 21284 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். இவர்களுக்காக விருதுநகர் 7 மையங்களில் 4683 பேரும், அருப்புக்கோட்டையில் 8 மையங்களில் 4584 பேரும், ராஜபாளையத்தில் 10 மையங்களில் 4287 பேரும், சிவகாசியில் 11 மையங்களில் 4090 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 மையங்களில் 3640 பேரும் என மொத்தம் 42 மையங்களில் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டு்ள்ளன. இத்தேர்வு மையங்களுக்கான கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.