மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் அண்மைக் காலமாக வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதே பகுதியில், அண்மையில் ஓடும் பேருந்தில் டிபன்பாக்ஸ்ஸில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் கைதான நிலையில், அவர்கள் தொடர்பான விசாரணை தற்போது இங்கே துவக்கியுள்ள நிலையில் மீண்டும் வெடிகுண்டு போன்ற பொருள் வெடித்துள்ளது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.