மணல் தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்ட ஆற்றங்கரையோரங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களில் சிலர் இரவு நேரங்களில் மணலை ஏற்றி வந்து தங்கள் வீட்டின் அருகே கொட்டி இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.குவாரிகள் செயல்பட்டபோது ரூ.700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டயர் வண்டி மணல், தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமானப் பணிக்கு மூலப் பொருட்களான சிமென்ட், ஜல்லிகளை விட மணல் பல மடங்கு தேவையுள்ளது.நான்கு மூட்டை சிமென்ட்டிற்கு ஒரு டயர் வண்டி மணல் தேவையுள்ளது. ஆனால், மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பலர் கட்டுமானப் பணியைப் பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.