எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூரில் நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள  நகைகள் கொள்ளை

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:48 pm

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் நகை கடையில் கதவை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். சனிக்கிழமை காலை வழக்கம்போல் சாந்திலால் நகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் 4 இரும்பு ஷட்டர்களும் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு நகை கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையின் வைத்திருந்த 3  கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 கோடி.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸில் சாந்திலால் புகார் அளித்தார்.  போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள கடலூர் லாரன்ஸ் சாலையில் கேஸ்  வெல்டிங் இயந்திரத்தை கொண்டு வந்து கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.