தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரையில் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தம்பதி விடுதியில் தற்கொலை

மதுரையில் விடுதி ஒன்றில் இன்று காலை கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:57 am

ஜெயப்பாண்டி

மதுரையில் விடுதி ஒன்றில் இன்று காலை கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (56). அவரது மனைவி  மகேஸ்வரி (50) இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில் திடீரென்று மேலப் பெருமாள் மேஸ்த்ரி வீதியில் போலியாக நெல்லை முகவரி கொடுத்து கோமதி, கிருஷ்ணன் என்ற பெயர்களில் இருவரும் தங்கியுள்ளனர்.

இன்று காலை வெகு நேரம் விடுதியில் கதவைத் திறக்காததால், சந்தேகம் கொண்ட ஊழியர்கள் கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் விஷம் அருந்திய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்ட போது, உண்மையான முகவரி தெரிந்துள்ளது. மேலும், அவர்கள் தங்கள்  இரு மகன்களுக்கும் போனில் பேசியிருக்கிறார்கள் என்பதால், போலீஸார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.