நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசி கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் தேரோட்டம்

தென்காசி, கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:39 am

பா.​ பிரகாஷ்

தென்காசி, கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரைப் பெருந் திருவிழா கடந்த23ம் தேதியன்று துவங்கியது. விழாவில் தினமும் அபிஷேகம், முழுக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரம் வீதிஉலா, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 8ம் நாளான செவ்வாய்க் கிழமை காலையில் திருவோலக்க மண்டபத்தில் மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள் நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலையில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரா.கணபதி முருகன், தக்கார் ரெ.சா.வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.