திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தேர்வுக்குச் சென்ற பிளஸ்-2 மாணவி டிராக்டர் மோதி சாவு

சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36).

Updated On :18 மார்ச் 2013, 1:31 pm

சேலத்தில் தேர்வு எழுதச் சென்ற பிளஸ்-2  மாணவி டிராக்டர் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இவர்களது குழந்தைகள் சரண்யா (17), மதன் (14). சரண்யா சேலம் மரவனேரி பாலபாரதி பள்ளியில் பிளஸ் 2- படித்து வந்தார். மதன் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சரண்யா, இன்று காலை வேதியியல் தேர்வு எழுதுவதற்காக மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். கோர்ட் ரோடு, பிள்ளையார் நகர் வளைவில் இருந்து மிதிவண்டியை தள்ளிக் கொண்டு சாலையோரமாகச் சென்று கொண்டிருந்தார்.அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் கந்தசாமி என்பவர் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் கொட்டி வைத்திருந்தார். இதனால் சாலை மிகவும் குறுகியிருந்தது. அப்போது அஸ்தம்பட்டி தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் ஏற்றிக் கொண்டு மரவனேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகராட்சியின் ஒப்பந்த டிராக்டர், சரண்யா மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய அவர் டிராக்டர் சக்கரத்துக்குள் விழுந்தார். சக்கரம் தலையில் ஏறியதால் படுகாயம் அடைந்த சரண்யா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் மாநகர காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். டிராக்டர் டிரைவர் தும்பல் அருகேயுள்ள எடப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் (47) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.