/

மதுரை பிஆர்பி கிரானைட் நிறுவன அலுவலகம், வீடுகளில் சோதனை

மதுரையில் கிரானைட் சுரங்கங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும், நிறுவனரின் உறவினர்கள் வீடுகளில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:48 am

ஜெயப்பாண்டி

மதுரையில் கிரானைட் சுரங்கங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும், நிறுவனரின் உறவினர்கள் வீடுகளில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டத்துக்கு விரோதமாக கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பிஆர்பி நிறுவனர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் மீது புதிதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், இன்று காவல்துறையினர் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 8 இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் எந்த விதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.