இந்த ஆண்டில் விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வருகிற ஆகஸ்டு மாதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன் அடிப்படையில் காரியப்பட்டி ஒன்றியத்தில் மாந்தோப்பு-31, மேலக்கன்னாங்குளம்-37, நரிக்குடி ஒன்றியத்தில் நல்லுக்குறிச்சி-30, நாலூர்-28, ராஜபாளையம் ஒன்றியத்தில் வடக்கு தேவதானம்-52, சாத்தூர் ஒன்றியத்தில் என்.மேட்டுப்பட்டி-39, சிவகாசி ஒன்றியத்தில் நெடுங்குளம்-22, ஊராம்பட்டி-36, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கொத்தங்குளம்-80, முள்ளிக்குளம்-31, திருச்சுழி ஒன்றியத்தில் மிதிலைக்குளம்-62, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் கனஞ்சான்பட்டி-19, விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டநத்தம்-20, குந்தலப்பட்டி-17 வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மகராஜபுரம்-92 என மொத்தம் 596 பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.