தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

காயத்துடன் புள்ளி மான் மரணம் : வனத்துறை விசாரணை

மதுரை திருமங்கலம் அருகே புள்ளி மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:27 pm

ஜெயப்பாண்டி

மதுரை திருமங்கலம் அருகே புள்ளி மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் அருகே ராயபுரம் என்ற பகுதியில் புள்ளி மான் ஒன்று உடலில் காயத்துடன் இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும், மதுரை மாவட்ட வனத்துறையினர் சென்று புள்ளி மானின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களில் மதுரை திருமங்கலம் வனப் பகுதியில் காட்டெருமை மற்றும் 4 புள்ளி மான்கள் மர்மாக இறந்து கிடந்தன. எனவே, இப்பகுதியில் யாரேனும் விலங்குகளை வேட்டையாடுகின்றனரா என்று அடிப்படையில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.