இதற்கு முன்பு வரையில் மதிப்பெண்கள் பெற்றதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகள் கூட்டமாக வ்நது குவிந்து விடுவார்கள். இதுபோன்ற காரணங்களால் நெரிசலில் நின்று பதிவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது, நெருக்கடியையும், போக்குவரத்து விரயத்தையும் தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே வேலைவாய்ப்பு பதிவுகளையும் கணிப்பொறி மூலம் மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், உடனே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடையாள அட்டையும் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்தார்.