இந்நிலையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சாத்தூர் மூலமாக கோவில் அருகே தாற்காலிக கடைகள், மோட்டார் செட்டுகள் ஆகியவை அகற்றப்படும் என நோட்டீஸ், தகவல் பலகை மற்றும் செய்தித்தாள் விளம்பரம் மூலம் அறி்ந்து கொண்டோம். அதோடு, இன்று(18-ம்தேதி) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. படித்து வேலை கிடைக்காத நிலையிலும், விவசாய காலங்களில் மழை பெய்யாத நிலையிலும், விவசாயம் அழிந்து வருகிறது. இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் சுயமாக சிறு கடைகள் நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வருகிற சூழ்நிலையில் கிராம மக்கள் உள்ளனர். எனவே ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை அழித்தால், வாழ்க்கைத் தரம் கேள்விக்குறியாகி விடும். அதோடு, இந்த வருமானத்தையே நம்பியே பிள்ளைகளின் கல்வி, உயர் கல்வி இருப்பதால் பாதிக்கும், அதனால் பல்வேறு குழப்பமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.