மேலும், இரவு நேரங்களில் கேட்டை பூட்டிக் கொண்டு வேலை செய்யும் போது, திடீரென வெடிச்சத்தம் கேட்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ளவர்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலையிருக்கிறது. அதோடு, மழை தண்ணீரிலும் கலந்து பல குடியிருப்புகளில் குடிநீரும் நச்சு தன்மையுடன் வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் திரண்டு சென்று கேட்டாலும், யார் கிட்டேயும் போய் சொல்லுங்க என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியும் வருகின்கின்றனர்.அதோடு, இக்குறிப்பிட்ட இடத்தில் அலுமினிய பவுடர் தயார் செய்வதற்கு அனுமதி பெறவில்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடத்திலிருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி நகர் பொதுமக்கள் சார்பில் எம்.காளிஸ்வாரி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.