அதேபோல், நிகழாண்டில் மத்திய அரசின் நேரடி நிதி உதவி 12 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மக்களின் தேவையறிந்தும், நலன் கருதியும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், மத்திய துணை திட்டக் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும், இதற்கு வழிகாட்டியாக இருந்த அன்னை சோனியாகாந்திக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். எப்போதுமே மத்திய அரசு, தமிழகத்திற்கு உதவி செய்வதற்கு தயராகவே இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்வதான் மூலமே தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.