எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:09 pm

VASUDEVAN.K

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி  முதல்வருக்கு கடிதம் அனுப்ப சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர் ஒன்றிய செயலர் மோகனசுந்தரம் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் மச்சேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி விளக்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார்.

கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்னுரிமையோடு அணுகி தீர்க்கப்படும் என தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டாண்டாகியும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதுகுறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ஜூன் 25-ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் விளக்க கூட்டம் நடத்துவது. வரும் 27-ம் தேதி சத்தணவு ஊழியர்கள் தங்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.