பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயற்சி: தரகருடன் இரு குடும்பத்தினர் சிக்கினர்
நாமக்கல் அருகே பிறந்து இரு நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றபோது தரகர் உள்பட இரு குடும்பத்தினர் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் சேந்தமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










