காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சையால் பள்ளிச் சிறுவன் இறந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் குமரவேல் (11). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். குமரவேல் கடந்த ஒரு மாதமாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அச்சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து சிறுவனை ஜூன் 6-ம் தேதி அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளிக்கிழமை (ஜூன் 7) காலை 8.30 மணிக்கு சிறுவனை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் செங்குட்டுவன், கார்த்தி ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. மாலை 4.30 மணிக்கு சிறுவனுக்கு ஜூஸ் வழங்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளர். அதே போல் சிறுவனுக்கு மாலை 4.30 மணிக்கு ஜூஸ் வழங்கியுள்ளனர். இதற்கிடையில் மாலை 6 மணிக்கு மேல் சிறுவனின் உடல்நிலை மோசமானது. இரவு 9 மணிக்கு மேல் சிறுவன் இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோம் மற்றும் குடும்பத்தினர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் உடல் இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

