இந்நிலையில் கர்ப்பமாக இருந்ததால், தாய் வீட்டிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றார். தற்போது, குழந்தை பிறந்துள்ள நிலையில் இதுவரையில் கணவர் வீட்டிலிருந்து உறவினர்கள் யாரும் பார்க்காமலும், திரும்ப அழைக்காமலும் இருந்துள்ளனர். பின்னர் உடனே கணவர் வீட்டிற்குச் சென்று ஏன் என்னை அழைக்க வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு கணவர், அவரது தந்தை சந்திரசேகரன், தாய் கனகவேல், உறவினர்களான ராணி, செல்வலட்சுமி, வீரலட்சுமி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் தான் வாழ முடியும் எனக் கூறி விரட்டியடித்துள்ளனர்.