கிராம ஊராட்சிகளில் வீடு கட்டுவோர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில்,திட்ட அனுமதி பெறாமல் வீடு கட்டி விடுகின்றனர். அதன் பிறகு மின் இணைப்பு பெறுகின்றனர். இதை காட்டி, குடிநீர் இணைப்பு,அரசு மானியத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு,கிராம ஊராட்சிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.கிராமங்களில், 4000 சதுர அடிக்குள் உள்ள இடத்தில் வீடு கட்டுவோர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில், பிளான் அப்ரூவல் பெற்று வீடு கட்டவேண்டும்.4000 சதுர அடிக்கு மேல் உள்ள நிலங்களில் வீடு கட்டவோ, வீட்டுமனை பிரித்து விற்க வேண்டும் என்றாலோ, மண்டல நகர் ஊரமைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும்.