புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(33). தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த அதிர்ச்சியில் இவரின் மனைவி தனசெல்வி(30) மனநிலை பாதிக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.கடந்த பத்து நாட்களுக்கு முன் தனசெல்வி தனது ஒன்றரை மாத ஆண்குழந்தையை தூக்கிக்கொண்டு கடலூர் நோக்கி நடந்து வந்தார். கடலூர் விருத்தாசலம் மார்க்கத்தில் கோதண்டராமபுரம் அருகே சென்றபோது கடும் வெயில் காரணமாக குழந்தையுடன் மயங்கி விழுந்தார். உடனே கிராம மக்கள் தாயையும் குழந்தையும் பாதுகாத்து குடிநீரும், உணவும் அளித்தனர்.