ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை

ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On :18 ஜூலை 2013, 9:54 am

ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

வடகரையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அனுப்பியுள்ள மனு : ஆம்பூர் தாலுக்கா வடகரை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.   அந்த கடை அமையுள்ள பகுதி வழியாக சுற்றுப்புற 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வரும் பொது வழியாகும்.  மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அந்த வழியை கடந்து தான் செல்ல வேண்டும். 

அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும்.  தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மணியாரகுப்பம் கூட்டு ரோடில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.   எனவே அருகாமையிலேயே மேலும் ஒரு டாஸ்மாக் கடை வடகரை கிராமத்தில் அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.   எனவே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.