தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நகை மோசடி: போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவு

மதுரை அருகே நகை மோசடி வழக்கில் சஸ்பெண்ட் போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவான நிலையில் அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:44 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகே நகை மோசடி வழக்கில் சஸ்பெண்ட் போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவான நிலையில் அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மதுரை தபால்தந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா. இவருக்கு குறைந்த விலையில் நகை வாங்கித்தருவதாகக் கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி, அவரது கணவர் ராமானுஜம் உள்ளிட்டோர் ரூ.64 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

 இதுதொடர்பாக அனுசுயா அளித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து நீலாவதி, ராமானுஜம் மற்றும் அவர்களது மகள், மருமகனை புதன்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் சுதாகர் மற்றும் ரவிகுமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

  இதில் சுதாகர் என்பவர் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ்காரர் என்றும்,  பணியில் இருந்து தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.