அழகிரியை சந்தித்த ஜி.கே.வாசன்: மீண்டும் தமாகா உதயமாகுமா?
மதுரையில் இன்று காலை உத்தரகாண்ட் விமான விபத்தில் இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னாள் மத்திய


மதுரையில் இன்று காலை உத்தரகாண்ட் விமான விபத்தில் இறந்துபோன பைலட் பிரவீன் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்து பேசினார். இந்த பேச்சு வார்த்தை சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இதன்பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்களை வாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரே நாளில் இரண்டு தலைவர்கள் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மதுரையில் வைத்து காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைத்தார் ஜி.கே.வாசன். ஆனால் தமாகா மீண்டும் உதயமாகாது என்று கூறிவரும் ஜி.கே.வாசன் இன்று மதுரையில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களை சந்தித்தது மீண்டும் தமாகா உதயாமாகுமா என்ற கேள்வியை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...