தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திய 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

Updated On :7 ஜூலை 2013, 5:40 am

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

 மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் சுகிபிரமிளா தலைமையில் துணை வட்டாட்சியர் அலெக்ஸாண்டர், வருவாய் ஆய்வாளர் செய்யதலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் சனிக்கிழமை இரவு நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆட்டோ நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். இதையடுத்து, கிராத்தூர் பகுதியில் சென்றபோது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினார்.

 தொடர்ந்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 19 கேன்களில் மொத்தம் 700 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், இவை மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானியவிலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் தெரியவந்தது.

 மண்ணெண்ணெய்யுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.