திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அகில இந்திய கபடி போட்டி பிப். 25-ல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான கபடி போட்டிகள் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:16 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்படும் அகில இந்திய ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி பிப்ரவரி 25-ம் தேதி தொடங்குகிறது.இதற்கான கால்கோல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான கபடி போட்டிகள் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் காலரி அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, காலரிஅமைப்பதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டஅதிமுக செயலரும், தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிறிஸ்தவ போதகர் ஞானதுரை ஜெபம் செய்து கால்கோலை நட்டுவைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். சின்னதுரை, மாநகராட்சி துணை மேயர்பி. சேவியர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் க. விஜயகுமார்,சுரேஷ்குமார்,  அதிமுக ஒன்றியச் செயலர்கள் சிவசுப்பிரமணியன், ராஜ்மோகன்,அம்மன் டி. நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 கபடி போட்டிகள் குறித்து அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறியதாவது: முதல்வரின் பிறந்தநாளையொட்டி அகில இந்திய அளவிலான ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் மின்னொளியில் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்கள் பலர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அகில இந்திய அளவில் ஆண்கள் பிரிவில் 16 அணியினரும், பெண்கள் பிரிவில் 12 அணியினரும் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட கபடி ரசிகர்களுக்குஇந்தப் போட்டிகள் நல்ல விருந்தாக அமையும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.