தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:31 pm

எஸ். பாண்டியன்

வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலைச்செல்வி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

இப்பணிக்காலியிடத்திற்கு கல்வித் தகுதியாக டிப்ளமோ என்ஜினியங்கில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பிரிண்டிங் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேசன் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு மூப்பு விவரம்: இதில் டிப்ளமோ என்ஜினியரிங்கில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் முடித்த பொது பிரிவினர்-26.2.1988 வரையும், பெண்கள்- 13.12.1999 வரையும் இருக்க வேண்டும். பிரிண்டிங் டெக்னாலஜி முடித்த முன்னுரிமை பிரிவினர் அனைவருக்கும் நடப்பு தேதி வரையிலும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-11.8.2000 வரையும்,  இன்ஸ்ட்ரூமென்டேசன்-கன்ட்ரோல் முடித்த பிற்பட்ட வகுப்பினர்-15.5.1989 வரையும், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் முடித்த அனைத்து பிரிவினர்-31.10.1985 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கலப்பு திருமணம் புரிந்தோர்-20.4.1998 வரையும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்த அனைத்து பிரிவினர்-8.12.1989 வரையும், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் முடித்த அனைத்து பிரிவினர்-8.12.1989 வரையும், இந்து ஆதிதிராவிடர் கலப்பு திருமணம் புரிந்தவர்கள்-22.6.2004 வரையிலும் இருக்க வேண்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பதிவு செய்துள்ளவர்கள் தகுதிச் சான்றிதழ்களுடன் வருகிற-2ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.