விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராமனுஜம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பூமிராஜா, மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், வட்டார நிர்வாகி சிங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி மூப்பின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.