சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகேயுள்ள அப்பமசமுத்திரம் வடக்குக் காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமுத்து. இவரது மகன்கள் அருண் (15), ஜெகன் (10). இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 10-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது.இதற்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இருவரையும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர்களிடம் இருந்தும் வெள்ளிக்கிழமை ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு மாணவர்களும் உடனடியாக பொது வார்டில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.மேலும் அவர்களிடம் இருந்து மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் முடிவிலேயே இருவருக்கும் டெங்கு காய்ச்சல்தானா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஆத்தூர் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குளிர்காலங்களில் ஏற்படக் கூடிய காய்ச்சல் ஏராளமான பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.இருப்பினும் தொடர்ந்து சளி, காய்ச்சல் இருக்குமானால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் சில உயிரிழப்புகளும் நேரிட்டன. இதனால் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டிருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

