விருதுநகர் அருகே சூலக்கரை 4 வழிச்சாலையில் பஸ் நிறுத்தம் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இக்குறிப்பிட்ட இடத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் ஆகியோர் பஸ் ஏறிச் செல்வது வழக்கமாகும். ஆனால், டாஸ்மாக் பாரை காலையிலேயே திறந்து விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அதோடு, மதுபோதையில் தகாத வார்த்தைகளையும் பேசி இடையூறு ஏற்படுத்தியும் வந்தனர். இதைத் தொடர்ந்து இக்கடையை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.