தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே அரசு கார் மோதி ஓட்டல் உரிமையாளர் சாவு

விருதுநகர் 4 வழிச்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரிவு சர்வீஸ் சாலை மீது ஓட்டல் நடத்தி வருபவர் ரத்தினம்(60). இவர் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் சென்று திரும்பி

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:21 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அரசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழ்ந்தார்.

விருதுநகர் 4 வழிச்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரிவு சர்வீஸ் சாலை மீது ஓட்டல் நடத்தி வருபவர் ரத்தினம்(60). இவர் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக எதிரே வேளாண்மைத் துறைக்கு சொந்தமான கார் எதிர்பாரதவிதமாக மோதியது. இதில், ரத்தினம் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தார்.

இது குறித்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு வேளாண்மை துறை கார் டிரைவர் நாகஜோதி(56) என்பவர் மீது விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.