திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து : இளைஞர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, ஆலம்பாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ்(19). சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:20 pm

பெ. விஜயபாஸ்கர்

 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, ஆலம்பாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ்(19). சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மதியம், தனது சித்தப்பா மகளை தேர்வு எழுவதற்காக சாலையோரம் உள்ள ம.புடையூர் அரசு பள்ளியில் விட்டு விட்டு அங்கிருந்து ஆவட்டி பஸ்நிலையம் நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.