மோட்டர் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் சாவு
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை


பெண்ணாடத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சிறுவன் படுகாயம் அடைந்தான்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, பெண்ணாடம் அருகே பொன்னேரியில் நடந்த அய்யப்ப கன்னி பூஜையில் கலந்து கொள்ள சிவகுருவும், செந்திலும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சிவகுரு தன்னுடைய 5 வயது மகன் முத்தமிழ்செல்வனையும் உடன் அழைத்து சென்றார்.
பின்னர் பூஜை முடிந்து இரவு 11.30 மணியளவில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகுரு ஓட்டி செல்ல செந்திலும், முத்தமிழ்செல்வனும் பின்னால் அமர்ந்து வந்தனர். பெண்ணாடம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிவகுரு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். செந்திலும், முத்தமிழ்செல்வனும் படுகாயம் அடைந்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில் உயிரிழந்தார். சிறுவன் முத்தமிழ்செல்வன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்தவிபத்து குறித்து பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...