திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மோட்டர் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் சாவு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:19 pm

பெ. விஜயபாஸ்கர்

பெண்ணாடத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சிறுவன் படுகாயம் அடைந்தான்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, பெண்ணாடம் அருகே பொன்னேரியில் நடந்த அய்யப்ப கன்னி பூஜையில் கலந்து கொள்ள சிவகுருவும், செந்திலும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சிவகுரு தன்னுடைய 5 வயது மகன் முத்தமிழ்செல்வனையும் உடன் அழைத்து சென்றார்.

பின்னர் பூஜை முடிந்து இரவு 11.30 மணியளவில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகுரு ஓட்டி செல்ல செந்திலும், முத்தமிழ்செல்வனும் பின்னால் அமர்ந்து வந்தனர். பெண்ணாடம்  நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிவகுரு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். செந்திலும், முத்தமிழ்செல்வனும் படுகாயம் அடைந்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில் உயிரிழந்தார். சிறுவன் முத்தமிழ்செல்வன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்தவிபத்து குறித்து பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.