விருதுநகர் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இதில், தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய நலவாரியங்களை சீர்க்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களில் 60 வயது பூர்த்தியானவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தாமதமாக பதிவு செய்வதை கண்டித்தும் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு வகையான 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.