தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இளைஞர் காவல் படையினருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு

தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கான

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:18 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படையினருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் உடல் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு இம்மாதம் கடைசி வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் நடைபெற இருக்கிறது. இதில், 1500 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், உயரம் மற்றும் மார்பளவு, கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நின்று நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில், குறிப்பிட்ட அளவில் புள்ளிகள் பெற வேண்டும். அதற்காக, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆயுதப்படை மைதானத்தை தயார் நிலையில் இருக்க வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படை 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6071 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கடந்த நவ-10ம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 5654 பேர் பங்கேற்றனர். தற்போது, இதில் 1714 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இம்மாதம் இறுதிக்குள் குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வு குறித்து தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட இருக்கிறது. இத்தேர்வு நடத்த முன்னேற்பாடக உபகரணங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை மைதானம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.