தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளிகளில், ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளால் தகவல் திரட்டும் படிவம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் அதிகமாக இருந்த நிலையில் நெருக்கடியாக அமர்ந்திருப்பதும், வகுப்பறைகள் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் எந்தெந்த பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆயுவுக் கூடம் தேவைப்படுகிறது. இதுபோன்றவைகளை ஆய்வு செய்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.